Published : 19 Apr 2016 04:02 PM
Last Updated : 19 Apr 2016 04:02 PM

ஏப்ரல் 25-ல் கோவில்பட்டியில் வைகோ வேட்புமனு தாக்கல்

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இதனால் அவரது பிரச்சார பயணத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதிமுக தலைமையகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளார். எனவே, அவர் வரும் 25-ம் தேதியன்று கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இதனால் 25-ம் பிரச்சாரம் செய்யவிருந்த கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவினாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் வரும் 26-ம் தேதியன்று வைகோ பிரச்சாரம் செய்வார்.

அதேபோல், 26-ம் தேதியன்று உளுந்தூர்பேட்டை தொகுதியிலுள்ள கிராமங்களிலும், விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளிலும் வைகோ பிரச்சாரம் செய்யவிருந்தார். அந்தப்பகுதியில், 27-ம் தேதியன்று பிரச்சாரம் செய்வார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x