Published : 19 Feb 2022 12:56 PM
Last Updated : 19 Feb 2022 12:56 PM

முற்பகல் 11 மணி வரை 21.69% வாக்குப்பதிவு: அரியலூரில் அதிகம், செங்கல்பட்டில் குறைவு | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாவட்ட வாரியாக நிலவரம்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி, மொத்தம் 21.69% வாக்குகள் பதிவாகின. இதில் மாநகராட்சியில் 17.93%, நகராட்சியில் 24.53% மற்றும் பேரூராட்சியில் 28.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமான அரியலூரில் 30.79%, குறைந்தபட்சமாக செங்கல்பட்டில் 10.65% வாக்குப்பதிவாகியுள்ளது. மாநகராட்சியைப் பொறுத்தவரை தாம்பரம் மாநகராட்சியில் மிகக் குறைவாக 6.95% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மாநகராட்சியில் அதிகபட்சமாக 26.64% வாக்குகள் பதிவாகியுள்ளன

தற்போது வரை தமிழகம் முழுவதும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோவையில் மட்டும் ஆங்காங்கே சலசலப்புகள் காணப்படுகின்றன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x