Published : 20 Apr 2016 08:19 AM
Last Updated : 20 Apr 2016 08:19 AM

நடிகை கே.ஆர்.விஜயா மகளுக்கு தொந்தரவு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது

கோவையில், நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

நடிகை கே.ஆர்.விஜயாவின் மூத்த மகள் ஹேமலதா மாடத்தில்(41). இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர் கணவரை விட்டுப் பிரிந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது இரு மகன்களும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர். இதனிடையே, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ஆர்.கதிர்வேல் என்பவர், ஹேமலதாவுக்கு நேரிலும், செல்போனிலும் தொந்தரவு கொடுத்து வந்ததாராம். இது தொடர்பாக, ஹேமலதா கொடுத்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கதிர்வேலை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x