Published : 21 Apr 2016 09:19 AM
Last Updated : 21 Apr 2016 09:19 AM
இந்து மக்கள் கட்சியின் 127 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியலை கோவையில் நேற்று வெளியிட்டு செய்தியாளர்களிடம் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது:
முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டி யலையும், தேர்தல் அறிக்கையை யும் வெளியிட்டுள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைக்கு தலா ரூ. 1 கோடி கடன் வழங் கப்படும். சுலபத் தவணை அடிப் படையில் அந்த பணத்தை கடன் பெற்ற பொதுமக்கள் கட்டலாம். நாங் கள் வழங்கும் இந்த கடன்தொகை மூலமாக ஒவ்வொருவரும் தொழிற் சாலை தொடங்குவார்கள். இதனால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரு கும். குடிமகன்களை கோடீஸ்வரர் ஆக்குவதுதான் எங்களது லட்சியம்.
இந்த நிதி ஆதாரத்தை திரட்டு வதற்கான திட்டம் எங்களிடம் உள் ளது. இலவச திட்டங்களை ரத்து செய்துவிட்டு அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி, ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்த தொகை ஆகியவற்றைக் கொண்டு கடன் கொடுப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT