Published : 13 Apr 2016 03:36 PM
Last Updated : 13 Apr 2016 03:36 PM
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்காததால் அகில இந்திய ஃபார்வர்ட் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''வரும் சட்டப் பேரவைத் தேர்தல் அதிமுக கூட்டணியில் போட்டியிட அகில இந்திய ஃபார்வர்ட் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக எங்களை அழைத்துப் பேசவில்லை.
அண்மையில் வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்குக்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை.எனவே, அதிமுக கூட்டணிலிருந்து எங்கள் கட்சி வெளியேறுகிறது.
வேறு எந்தக் கட்சியுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணி குறித்து ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்று பி.வி.கதிரவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT