Published : 12 Apr 2016 08:11 AM
Last Updated : 12 Apr 2016 08:11 AM

பாஜக தலைவர் அமித்ஷா நாளை திருச்சி வருகை

வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தலைவர் அமித்ஷா நாளை திருச்சி வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிஆர்பிஎப் கமாண்டோ படையினர் நேற்று ஆய்வு நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நாளை (ஏப்ரல் 13) திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடை பெற உள்ளது. இதில், பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஜவடேகர், தேசியத் தலைவர் முரளிதர ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையொட்டி, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் தலைவர்கள் அமருவதற்காக ஒரு மேடையும், அதற்கு அருகிலேயே வேட்பாளர்கள் அமருவதற்காக தனியாக மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமித்ஷாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பெங்களூருவில் உள்ள சிஆர்பிஎப் கமாண்டோ பிரிவின் உதவி கமாண்டன்ட் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று திருச்சி வந்தனர். அவர்கள், மத்திய உளவுத்துறை உதவி இயக்குநர் மதியழகன், மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல், மாநில உளவுப் பிரிவு டிஎஸ்பி தர், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் கபிலன் உள்ளிட்டோருடன் இணைந்து ஆய்வு நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x