Published : 17 Feb 2022 04:25 PM
Last Updated : 17 Feb 2022 04:25 PM

ஈரோட்டில் திமுக வேட்பாளர்கள் இருவர் அடுத்தடுத்து உயிரிழப்பு: இரு வார்டுகளில் வாக்குப்பதிவு ரத்து

ஈரோடு: ஈரோட்டு மாவட்டத்தில் இரு பேரூராட்சிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, இரு வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 2-வது வார்டில் திமுக சார்பில் சித்து ரெட்டி (62) போட்டியிட்டார். கடந்த ஒரு வாரமாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சித்து ரெட்டி, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பெருமாபாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் (50), நேற்று முன் தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனிடையே, வேட்பாளர்கள் உயிரிழந்ததையடுத்து 2 வார்டுக்கான வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி ரத்து செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x