Published : 21 Apr 2016 09:06 AM
Last Updated : 21 Apr 2016 09:06 AM

சீட் கிடைக்காததால் விரக்தி: பாமக மாநில நிர்வாகி தற்கொலை முயற்சி?

பவானி சட்டப்பேரவைத் தொகு தியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பாமக மாநில துணைப் பொதுச்செய லாளர் மகேந்திரன் தற் கொலைக்கு முயன்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி யைச் சேர்ந்த க.சு.மகேந்திரன், பாமக மாநில துணைப்பொதுச் செயலாளர். பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டி யிட பாமக தலைமையிடம் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரனின் ஆதரவாளர்கள் கடந்த இரு நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பவானியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இருந்தார். அப்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமநாதன், தனது ஆதரவாளர்களுடன் வந் தார். அவரை மகேந்திரன் ஆதர வாளர்கள் தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அலுவலகத் துக்குள் கட்சி நிர்வாகிகள் சென்ற போது, மகேந்திரன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். கட்சித் தலைமை தனக்கு சீட் கொடுக் காமல் புறக்கணித்ததால், விரக்தி யடைந்த அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், பவானியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அவரை அழைத்து சென்றனர். தற்போது ஈரோட் டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் மகேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x