Published : 11 Apr 2016 07:18 AM
Last Updated : 11 Apr 2016 07:18 AM

சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதாவின் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் முடிந்த நிலையில், நேற்று சென்னை மாவட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் அடுத்த கட்ட பிரச்சாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் கடந்த 4-ம் தேதி முதல்வர் ஜெய லலிதா, அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் தீவுத்திடலில் தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தையும் தொடங்கினார். அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி பேசினார்.

இக்கூட்டத்தில், 21 தொகுதி களையும் சேர்ந்த பொதுமக்கள், அதிமுகவினர் பங்கேற்றனர். இது தவிர, ஆங்காங்கே ‘எல்இடி’ திரை பொருத்தப்பட்ட பிரச்சார வாகனங்கள், சம்பந்தப் பட்ட தொகுதிகளில் ஆங் காங்கே நிறுத்தப்பட்டு, அதில் முதல்வர் உரை திரையிடப் பட்டது.

இந்நிலையில், சென்னையில் தொகுதிவாரியாக நியமிக்கப் பட்ட அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் நேற்று காலை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி களில் வழக்கமான பிரச்சாரத்தை தொடங்கினர். அதே நேரம், தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த தொகுதி பொறுப்பாளர்களுடன் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக ஆலோ சனை நடத்தினர். மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஆர். நடராஜ், தன் தொகுதிக்குட்பட்ட பகுதியில், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இன்று முதல், மற்ற வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x