ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் : எடப்பாடி பழனிசாமி

ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் : எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

சேலம்: ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் நடைபெறும் சூழலில் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சேலத்தில் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “ ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவது உறுதி. நாங்கள் உண்மையை கூறுகிறோம். சொன்னதை செய்கிறோம். அதன் காரணமாகதான் மக்கள் எங்களை நம்புகிறார்கள்.

கடன்ந்த 9 மாதங்களில் திமுக செல்வாக்கு சரிந்துள்ளது. வேளாண் பெருமக்களுக்கு எந்த திட்டத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு நிவாரணம் கிடையாது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் யாரும் அறிவித்தார்கள்.ஆனால் வழங்கவில்லை. திமுக குடும்பம்தான் தற்போது வளமாக இருக்கிறது” என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in