Published : 25 Apr 2016 08:49 AM
Last Updated : 25 Apr 2016 08:49 AM

ஜெ. வாக்குறுதிகள் பொய்: பிரேமலதா குற்றச்சாட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேமுதிக வேட்பாளர் முருகையன் பாபுவை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக மகளிர் அணித் தலைவர் பிரேமலதா பேசியது:

ஜெயலலிதாவின் அறிவிப்புகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகளே. தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி ஆட்சியில் மீத்தேன், ஷேல் காஸ் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம். தமிழக நதிகள் அனைத்தையும் இணைப்போம். விவசாயிகள், நெசவாளர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்துவோம். பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, மது இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x