Published : 11 Feb 2022 01:27 PM
Last Updated : 11 Feb 2022 01:27 PM

தென் கடலோர, டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு

கோப்புப் படம்

சென்னை: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காணமாக, தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மழை பெய்யக்கூடும்.

இதேபோல் பிப் 12-ம் தேதி நாளை, தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் 8 செ.மீ மழையும், வேதாரண்யத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x