Published : 30 Apr 2016 08:51 AM
Last Updated : 30 Apr 2016 08:51 AM

ரூ.525 கோடி மின்சார ஊழல்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

`தமிழகத்தில் மின்துறையில் ரூ.525 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று இரவு பேசியதாவது:

அதிமுகவும், திமுகவும் பண பலத்தை நம்பி தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆனால் நாங்கள் மக்கள் பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறோம். எங்களது கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் ஏழைகள். அவர்களை வெற்றிபெற வைக்க தொண்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்ற வேண்டும்.

திறந்தவெளி மாநாடு

தமிழகத்தில் மின்துறையில் ரூ.525 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. திருச்சியில் வரும் மே 11-ம் தேதி எங்கள் கூட்டணி சார்பில் திறந்தவெளி மாநாடு நடத்துகிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா ஜெயிக்க முடியாது. அங்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் வசந்திதேவிதான் வெற்றிபெறுவார்’ என்றார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x