

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், திருப்பூர் மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் கால்நடை மருத்துவம்மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்), உணவு, கோழியினம், பால்வள தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவற்றுக்கான பொதுப் பிரிவு தரவரிசைப் பட்டியல் கடந்த 2-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின்படி அரசுப் பள்ளிமாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2,719 பேர் இடம்பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி எம்.பிரியா (கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 193.430) முதலிடம் பிடித்துள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த பி.பவித்ரா (193.395) 2-ம் இடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த ஜே.எஸ்.தீபகுமார் (192.995) 3-ம்மூன்றாம் இடத்தையும், எஸ்.கனிதாரன் (192.570) 4-ம் இடத்தையும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி ஆர்.சுவேதா (192.195) 5-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலை www.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். நேரடி மற்றும்ஆன்லைன் கலந்தாய்வு குறித்தஅறிவிப்பு விரைவில் இணைய தளங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.