

தஞ்சாவூர்: மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2வகுப்பு படித்து வந்த 17 வயதுமாணவி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, அந்த மாணவியைஅதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதி காப்பாளர் சகாயமேரியை(62) கைது செய்தனர்.
சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாமீன் கோரி சகாயமேரி மனு தாக்கல் செய்தார். இதன் மீது நேற்று நடைபெற்ற விசாரணையில் சகாயமேரிக்கு நீதிபதி பி.மதுசூதனன் ஜாமீன் வழங்கினார்.
மனுத் தாக்கல்
இதேபோல, பள்ளி நிர்வாகி ராக்கேல்மேரி மீதும் புகார் எழுப்பப்பட்டு, அவரை கைது செய்ய வேண்டும் என பெற்றோர், பாஜக, விஎச்பி, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்துராக்கேல்மேரிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருக்காட்டுப்பள்ளி போலீஸார், அந்த மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதி காப்பாளர் சகாயமேரியை(62) கைது செய்தனர்.