Published : 17 Apr 2016 10:58 AM
Last Updated : 17 Apr 2016 10:58 AM
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களாக அறி விக்கப்பட்ட கே.என்.நேரு (திருச்சி மேற்கு), மகேஷ் பொய் யாமொழி (திருவெறும்பூர்), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), சவுந்தரபாண்டியன் (லால்குடி), கணேசன் (மண்ணச்சநல்லூர்), ஸ்டாலின் குமார் (துறையூர்) ஆகியோர் நேற்று முன்தினம் திருச்சி சிந்தாமணியிலுள்ள அண்ணா சிலை மற்றும் அரசி யல் கட்சித் தலைவர்கள் சிலை களுக்கு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்தது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் 100 பேர் மீது கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே பிரிவுகளின்கீழ் கே.என்.நேரு உட்பட 200 பேர் மீது கோட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT