Published : 04 Feb 2022 05:47 PM
Last Updated : 04 Feb 2022 05:47 PM

மதுரை: எம்ஜிஆர் வேடத்தில் வேட்புமனு தாக்கல் செய்த மநீம வேட்பாளர்

மதுரை: மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பாட்ஷா என்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் முக்கியக் கட்சிகள் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில், மதுரை மேற்கு மாநகராட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் வேடமிட்டு 17-வது வார்டுக்கு மனு தாக்கல் செய்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பாட்ஷா.

முன்னதாக, மதுரை மாநகராட்சி 78-வது வார்டில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று கண்ணகி போல் கால் சிலம்பை கையில் ஏந்தியபடி நூதன முறையில் பொறியியல் பட்டதாரி மதுமிதா அசோகன் மண்டலம் 4-வது அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x