Published : 04 Feb 2022 05:16 PM
Last Updated : 04 Feb 2022 05:16 PM

கோவை: குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

கோவை: கோவையில் 32-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மகேஷ்வரன் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தது கவனம் ஈர்த்தது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் முக்கியக் கட்சிகள் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

அந்த வகையில், கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில், பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருவதைக் சுட்டிக்காட்டும் விதமாக, 32-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மகேஷ்வரன் குதிரையில் வந்து வேட்மனு தாக்கல் செய்தார்.

மகேஷ்வரன் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ததை, அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் வியப்பாக பார்த்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x