Last Updated : 03 Feb, 2022 09:23 PM

 

Published : 03 Feb 2022 09:23 PM
Last Updated : 03 Feb 2022 09:23 PM

தேனி மாவட்ட அனைத்து நகராட்சி தலைவர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு 

மதுரை: தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி தலைவர் பதவிகளையும் பெண்களுக்கு ஒதுக்கியதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேனி பெரியகுளத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், சின்னமனூர், தேனி - அல்லிநகரம், பெரியகுளம், போடிநாயக்கனூர் என 6 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளின் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி ஜனவரி 17-ல் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

பொதுவாக உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவி 50 சதவீதம் ஆண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் 6 நகராட்சி தலைவர் பதவியையும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தலைவர் பதவிக்கு ஆண்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து, 50 சதவீத நகராட்சி தலைவர் பதவியை ஆண்களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இதேபோன்ற கோரிக்கைகளுடன் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x