

கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் செல்ஃபி எடுத்த போது 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த மதுரையைச் சேர்ந்த இளைஞரை தேடும் பணி நடந்து வருகிறது.
கொடைக்கானலுக்கு மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் சுற்றுலா சென்றனர்.
வட்டக்கானல் அருகே பள் ளத்தாக்கு நிரம்பிய பகுதியான வனத்துறையால் தடை செய் யப்பட்ட ரெட்ராக் பகுதிக்குச் சென்ற இளைஞர்கள் அங்குள்ள பாறை விளிம்பு அருகே நின்று செல்ஃபி எடுத்துள்ளனர். இதில் ராம்குமார்(32) என்பவர் தடுமாறி 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். உடன் சென்றவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தக வல் தெரிவித்தனர்.
போலீஸார் நடத்திய விசார ணையில் அனைவரும் மது அருந் தியது தெரியவந்தது.
நேற்று மாலை முதல் ரெட்ராக் பகுதியில் அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டதால் தவறி விழுந்த இளைஞரை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.