Published : 05 Apr 2016 09:14 AM
Last Updated : 05 Apr 2016 09:14 AM
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கணித தேர்வு நேற்று நடந்தது. இதில் வினா எண் 47 (அ)-ல் (வரைபடம் தொடர்பான கேள்வி) கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்வியில் 6 என்று குறிப்பிடுவதற்குப் பதில் தவறுதலாக ஆங்கில எழுத்து ‘b’ குறிப்பிடப்பட்டுள்ளது. பிழையான கேள்வி என்பதால், மாணவர்களால் இதற்கு சரியாக விடையளித்திருக்க முடியாது.
எனவே, இந்த கேள்விக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே கேள்விக்கான 10 மதிப்பெண்ணை கருணை மதிப்பெண்ணாக (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT