Published : 27 Apr 2016 09:22 AM
Last Updated : 27 Apr 2016 09:22 AM

தமிழகத்தில் 3 நாட்களில் 1054 பேர் மனுத் தாக்கல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் 3-வது நாளான நேற்று வரை 124 பெண்கள் உட்பட 1054 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. 3-ம் நாள் மனுத்தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், மனுத்தாக்கல் செய்ய பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, 124 பெண்கள், 928 ஆண்கள் என ஆயிரத்து 52 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நான்காவது நாளாக இன்று சென்னை கொளத்தூரில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆர்.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வசந்தி தேவி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x