Published : 21 Apr 2016 09:24 AM
Last Updated : 21 Apr 2016 09:24 AM

சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் 23-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் வரும் 23-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து அக்கட்சி யின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட் டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி வரும் 23-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை 14 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 17 பொதுக் கூட்டங்களிலும், 19 இடங்களில் வேன்களில் இருந்தும் அவர் பேசுகிறார். இது தொடர்பாக சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப் பிரமணியனிடம் கேட்டபோது, ‘‘வரும் 23-ம் தேதி மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதற்கான ஏற் பாடுகளை செய்து வருகிறோம். மழை, வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் அதிமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, சென்னையில் திமுக எளிதாக வெற்றி பெறும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x