Published : 19 Apr 2016 08:16 AM
Last Updated : 19 Apr 2016 08:16 AM
அதிமுக வேட்பாளர்களை அடிமைகள்போல முதல்வர் ஜெயலலிதா நடத்துகிறார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் பல்வேறு இடங்களில் நேற்று அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர் தப்பிக்க முடியாது மக்களை சந்திக்காதவர் இப்போது வாக்கு கேட்டு வருகிறார். 3 அடுக்குமாடி போல உயர்ந்த மேடையில் ஏ.சி.யில் ராணிபோல அமர்ந்துகொண்டு, அதற்கு கீழே தரை மட்டத்தில் 15 வேட்பாளர்களை உட்கார வைத்துக்கொள்கிறார். இவர்கள் ஜெய லலிதாவைப் பார்த்ததும் காலில் விழுவதாக நினைத்து மேடையில் கீழே விழ வேண்டும் வளைந்து கும்பிடு போட வேண்டும் வேட்பாளர்களை அடிமைகளைப் போல, அகதிகளைப் போல நடத்துகிறார் ஜெயலலிதா.
இதனால் அந்த வேட்பாளர்கள் சுயமரி யாதையை இழந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் திமுகவில் அப்படி யில்லை. எனக்கு அருகிலேயே கம்பீரமாக நிற்கின்றனர் வேட்பாளர்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவருடன் வேட்பாளர்கள் கே.என்.நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்) பழனி யாண்டி (ஸ்ரீரங்கம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக கரூர் மாவட் டம் குளித்தலையில் நேற்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது, “பெண்களின் நீண்டநாள் கோரிக் கையான மதுவிலக்கை கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஹீரோ” என்றார். குளித்தலையில் ஸ்டாலின் பேசியபோது ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த’என்று ஜெயலலி தாவைப் பற்றியும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி பேசும்போது, முறைகேடுகளை பட்டியலிட்டவர் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல’ என்றும் மீண்டும் பாடினார். வேட்பாளர் அறி முகத்தின் போது அதிமுக வேட்பாளர்கள் எப்படி நிறுத்தப் படுகின்றனர் என்று நடித்தும் காட்டினார்.
லால்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், அங்கு பேசியபோது, “ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களை வெயிலில் உட்கார வைப்பது குறித்தும், அதிமுக வேட்பாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ‘தி இந்து’வில் அருமையான கட்டுரை வெளியாகியுள்ளது. அதை அனைவரும் படியுங்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT