Published : 18 Apr 2016 08:05 AM
Last Updated : 18 Apr 2016 08:05 AM
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் திமுக தலைவர் கருணாநிதி 2-வது முறையாக போட்டியிட உள்ளார். இதற்காக ஏப்ரல் 25-ம் தேதி திருவாரூர் வரும் கருணாநிதி, அன்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு நேற்று திருவாரூர் வந்தார். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தன் அத்தையின் வீட்டில் தங்கிய அவர், அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். எந்தெந்த ஊர்களில் திமுகவுக்கு செல்வாக்கு உள்ளது, எங்கு ஆதரவு குறைவாக உள்ளது என நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது, தேர்தல் நடக்கும் நாள் வரை திருவாரூரிலேயே தங்கி தனது தந்தை கருணாநிதிக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். அதேபோல் கருணாநிதி யின் மகள் செல்வியும் விரைவில் திரு வாரூர் வந்து, பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT