Published : 31 Jan 2022 10:51 AM
Last Updated : 31 Jan 2022 10:51 AM

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம்

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய அவரது உறவினர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமா தானப்படுத்தினர்.

பாளையங்கோட்டை, தெற்கு பஜார் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் பொன்னுதாஸ் என்ற அபே மணி (38). திமுக வட்டச் செயலாளரான இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பொன்னுதாஸ் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வீட்டருகே உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் அருகே சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த மர்ம நபர்கள், இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர்.

இதில் கீழே விழுந்த பொன்னுதாஸை அவர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுதாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ் சமீபத்தில் டாஸ்மாக் பார் ஏலம் எடுத்து நடத்தி வந்துள்ளார். இந்த பிரச்சினையில் கொலை நடந்ததா, அல்லது அரசியல் போட்டி உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும், கொலையாளிகள் யார் என்பதும் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொலையாளி களை கைது செய்யக் கோரி பொன்னுதாஸ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x