Published : 27 Apr 2016 09:24 AM
Last Updated : 27 Apr 2016 09:24 AM

ஸ்டாலின் 3-ம் கட்ட பிரச்சாரம்: கோவையில் 29-ல் தொடங்குகிறார்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது 3-ம் கட்ட பிரச்சாரத்தை கோவையில் 29-ம் தேதி தொடங்குகிறார். தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை கடந்த 15-ம் தேதி மதுரையில் தொடங்கி 22-ம் தேதி காஞ்சிபுரத்தில் நிறைவு செய்தார். 2-வது கட்ட பிரச்சாரத்தை 23-ம் தேதி திருவள்ளூரில் தொடங்கினார். 28-ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். இதைத் தொடர்ந்து வரும் 29-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை 3-வது கட்டமாக பிரச்சாரம் செய்ய உள்ளார். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3-வது கட்டமாக 29-ம் தேதி கோவை, 30 - நீலகிரி, ஈரோடு, மே 1-ம் தேதி நாமக்கல், 2 - சேலம், 3 - தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் 4 ம் தேதி புதுச்சேரியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x