Published : 28 Jan 2022 06:00 AM
Last Updated : 28 Jan 2022 06:00 AM

கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர்எஸ்.பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் உள் பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

29, 30-ம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x