Last Updated : 27 Jan, 2022 04:39 PM

 

Published : 27 Jan 2022 04:39 PM
Last Updated : 27 Jan 2022 04:39 PM

கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு

கடலூர்: கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் இன்று சமத்துவபுரத்தின் அருகில் இருந்த பழைய அரசு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த 3 பள்ளி மாணவர்கள் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கிய இரண்டு பேரை உயிரிழந்த நிலையிலும், ஒருவரை உயிருடனும் மீட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்ததது, பிளஸ் 2 மாணவர்களான வீரசேகர் (17), சுதீஷ்குமார் (17) என்பது, படுகாயத்துடன் மீடகப்பட்டது மாணவன் புவனேஷ் (17) என்பதும் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x