எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6,990 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டுப் பிரிவினர் பங்குபெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதேபோல் ஜனவரி 28 மற்றும் ஜனவரி 29-ஆம் தேதிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in