Published : 27 Jan 2022 09:35 AM
Last Updated : 27 Jan 2022 09:35 AM

புதுச்சேரி கடல் பகுதியில் 3 மாதத்தில் 40 ஆமைகள் உயிரிழப்பு

புதுச்சேரியில் கடந்த நவம்பரில் இருந்து தற்போது வரை 40ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. அவற்றை வனத் துறையினர் கண்டெடுத்து புதைத் துள்ளனர்.

இந்தியாவில் காணப்படும் கடல்ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப் படும் ஆமை இனமும் இதுதான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய பெருங்கடல், பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வசிக்கக் கூடி யவை. இத்தகைய ஆலிவ் ரிட்லி ஆமைகள் புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட கடலோர பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதைவழக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, மணற்பரப்பு அதிக முள்ள புதுச்சேரி பகுதிகளான கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் வரை கடலோரப் பகுதிகளில் இந்த ஆமை கள் அதிகளவு முட்டையிட்டு செல் வது வழக்கம்.

ஒரு ஆமை 100 முதல் 120முட்டைகள் வரை இட்டுச் செல்லும்.பெரிய ஆமைகளாக இருந்தால் 190 முட்டைகள் வரை இடுவதுண்டு. அழிந்து வரும் நிலையில் உள்ள இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்க வனத்துறை பல்வேறுமுயற்சிகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் முட்டைகளை புதுச்சேரி வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்புத் துறையினர், உள்ளூர் இளைஞர்களின் துணை யுடன் சேகரித்து பாதுகாத்து பின்னர் குஞ்சு பொரித்ததும் பத்திரமாக கடலில் விடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் இனப்பெருக் கத்திற்காக தமிழகம், புதுச்சேரிகடலோர பகுதிக்கு வரும் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதும் தொடர்கதையாகி வருகி றது. இந்நிலையில் தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் கடலோர பகுதியில் நேற்று 3 ஆலிவ் ரிட்லி ஆமைகள் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. கடுமையான துர்நாற்றமும் வீசியது. இதனை அப்பகுதியில் சென்றவர்கள் கண்டு புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 30 முதல் 35 கிலோஎடை கொண்ட அந்த 3 ஆமைகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.பின்னர் அவற்றை கடற்கரையி லேயே பள்ளம் தோண்டி புதைத் தனர்.

இதுதொடர்பாக வனத்துறை யினர் தரப்பில் கூறும்போது, ‘‘இனப்பெருக்கத்துக்காக புதுச் சேரி கடற்கரைக்கு வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு, திரும்பிச் செல்லும்போது படகு என்ஜினில் சிக்கி அடிபட்டு இறந்து விடுகின்றன. அவ்வாறு இறக்கும் ஆமைகள் ஆங்காங்கே கரை ஒதுங்குகின்றன. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை புதுச்சேரி அடுத்துள்ள மூர்த் திக்குப்பம், புதுக்குப்பம் முதல் கனகசெட்டிக்குளம் வரையிலான கடலோர பகுதிகளில் இறந்து ஒதுங்கிய 40 ஆமைகளை கண் டெடுத்து கடற்கரையிலேயே புதைத்துள்ளோம். சில தினங் களுக்கு முன்பு கூட ஒரே நாளில் 7 ஆமைகள் வரை இறந்து கரை ஒதுங்கின’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x