Published : 22 Apr 2016 10:00 AM
Last Updated : 22 Apr 2016 10:00 AM
ஓர் ஊருக்கு ஆறு சொம்புகளும் ஆறு நாட்டாமைகளுமா? என தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணியை நடிகர் ராமராஜன் விமர்சித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து நடிகர் ராமராஜன் மேல்விஷாரம் கத்தியாவடி அருகே நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘பழம் நழுவி எப்ப பாலில் விழும்னு கருணாநிதி காத்திருந்தார். அந்தப் பழம் அழுகி வெளியில் விழுந்துவிட்டது. ஒர் ஊரில் பஞ்சாயத்து என்றால் ஒரு சொம்பு, ஒரு நாட்டாமை இருக்க வேண்டும். ஆனால், 6 சொம்புகளும் 6 நாட்டாமைகளும் இருந்தால் விளங்காது ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT