Published : 26 Jan 2022 06:13 AM
Last Updated : 26 Jan 2022 06:13 AM

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம் செய்யும் நிகழ்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்: பத்மபூஷன் சிவதாணு பிள்ளை உரையாற்றுகிறார்

சிவதாணு பிள்ளை

சென்னை: தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம்செய்யும் வகையில் இணையம்வழியே இன்று நடைபெறவுள்ளதொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும்குழந்தைகளிடம் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்துகிற நிகழ்வின் தொடக்க விழா இன்று(ஜன.26) மாலை 6 மணிக்குஇணையம் வழியே நடைபெற உள்ளது.

இத்தொடக்க விழாவுக்கு தமிழக பள்ளிக் கல்வி ஆணையர்கே.நந்தகுமார், ஐஏஎஸ் தலைமையேற்கிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், ரஷ்யன் மையத்தின் அறிவியல் மற்றும் கலாச்சார இயக்குநர் ஜென்னடி ரொகாலிவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வை பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தின் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான பத்மபூஷன் ஏ.சிவதாணு பிள்ளை தொடங்கி வைப்பதோடு, ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றவுள்ளார். 15 இணையவழி நிகழ்வுகளாக நடைபெறஉள்ள இந்த நிகழ்வில் பங்கேற்று, சிறந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புவர்கள் https://www.htamil.org/00226 என்ற லிங்க்கில்பதிவுசெய்துகொண்டு பங்கேற்கலாம்.

இந்த நிகழ்வின் யூ-டியூப் பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்று, சிறந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x