Published : 23 Apr 2016 08:04 AM
Last Updated : 23 Apr 2016 08:04 AM
கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சி.கோவிந்த ராஜை ஆதரித்து, நேற்று முன் தினம் இரவு சின்னத்திரை நடிகை பாத்திமா பாபு பிரச்சாரம் மேற்கொண்டார். காவேரிப் பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசிய தாவது:
தமிழகத்தில் பெண்கள் அச்சமில்லாமல் வாழ உலகி லேயே, அனைத்து மகளிர் காவல் நிலையம் திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் ஜெயலலிதா.
இதுவே திமுக ஆட்சியாக இருந்தால் மக்கள் 8 மணிக்கே வீட்டுக்குள் தஞ்சம் அடைந்து விடுவார்கள். அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சரியில்லாத கொடூர ஆட்சியாகவும், கயவர் களின் ஆட்சியாகவும் இருந்தது. கருணாநிதி ஆட்சியில் அவரது குடும்பம் மட்டுமே வளர்ச்சி பெறும், ஜெயலலிதா ஆட்சியில் சாதாரண தொண்டர்கூட அமைச்சராகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் தியாகு பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் நன்னி லத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.காமராஜை ஆதரித்து, நடிகர் தியாகு நேற்று பேசியது:
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக உள்ள காமராஜ் பல கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். எனவே, அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் அதிகமாக உள்ளது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக-காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT