Published : 13 Apr 2016 08:46 AM
Last Updated : 13 Apr 2016 08:46 AM

வானொலியில் பிரச்சாரம்: கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு

தேசிய, மாநிலக் கட்சிகள் அகில இந்திய வானொலியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

அகில இந்திய வானொலியில் தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய குலுக்கல் முறையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 3-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை மற்றும் மே 9-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் மாலை 6 மணி முதல் 6.20 மணி வரையிலும், மாலை 6.40 மணி முதல் இரவு 7.10 மணி வரையிலும், பின்னர் இரவு 7.25 மணி முதல் இரவு 8.20 மணி வரையிலும் தேர்தல் பிரச்சாரத்துக்காக நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் அகில இந்திய வானொலியில் தலா 5 நிமிடங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளன.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x