அமைந்தகரை, சாலிகிராமத்தில் 9-ம் தேதி பாஸ்போர்ட் மேளா

அமைந்தகரை, சாலிகிராமத்தில் 9-ம் தேதி பாஸ்போர்ட் மேளா
Updated on
1 min read

பொதுமக்களின் வசதிக்காக அமைந்தகரை, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெளிநாடுகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து அவர்களுக்கான பாஸ்போர்ட் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதற்காக அவ்வப்போது சிறப்பு பாஸ்போர்ட் மேளாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 19-ம் தேதி தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பாஸ்போர்ட் மேளாவில் 435 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக அமைந்தகரை, சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேமை மையத்தில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் ‛ஆன்-லைன்’ மூலம் நேர்காணலுக்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பங்கேற்கலாம். இந்த சிறப்பு மேளாவில் தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த சிறப்பு மேளா மூலம் சுமார் ஆயிரத்து 500 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in