Published : 12 Apr 2016 12:50 PM
Last Updated : 12 Apr 2016 12:50 PM
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பொன்.குமாரின் தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் பொன்.குமார் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து திமுக அணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், உளுந்தூர்பேட்டை, தொண்டாமுத்தூர், நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
புதிய தமிழகம் கட்சிக்கு ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிப்புத்தூர் (விருதுநகர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) ஆகிய தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வாணியம்பாடி (வேலூர்), பூம்புகார் (நாகை), கடையநல்லூர் (திருநெல்வேலி), மணப்பாறை (திருச்சி), விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
சமூக சமத்துவப் படைக் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியும், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பொன்.குமாரின் தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT