Published : 25 Apr 2016 12:33 PM
Last Updated : 25 Apr 2016 12:33 PM
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
தண்டயார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின் போது ஜெயலலிதாவுடன் சசிகலா வந்திருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்த ஜெயலலிதா அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்களைப் பார்த்து வெற்றிச் சின்னத்தை காட்டி காரில் புறப்பட்டுச் சென்றார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 16-ம் தேதி நடக்கிறது. இந் நிலையில், கடந்த 22-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அன்று ஒரு சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 83 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை தினங்கள் என்பதால் மனு தாக்கல் இல்லை. இதையடுத்து, இன்று மீண்டும் மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள சிம்லா முத்துச்சோழனும் இன்று மனு தாக்கல் செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT