Published : 20 Apr 2016 08:31 AM
Last Updated : 20 Apr 2016 08:31 AM

தெருவுக்கு தெரு பெருகிய மது கடைகள்: பிரேமலதா குற்றச்சாட்டு

மதுரை புதூரில் வடக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் முஜிபுர் ரகுமானை ஆதரித்து பிரேம லதா விஜயகாந்த் நேற்று பேசிய தாவது:

மதுரை மாநகராட்சி பகுதியில் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. முறை யான கால்வாய் இணைப்பு இல்லை. மேயர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. 100 வார்டுகளுக்கு எந்த திட்டங்களை யும் செய்யாத அவர் எப்படி 18 வார்டுகள் உள்ள பகு திக்கு செய்வார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தப் படவில்லை. ஆனால் புரோட்டா கடைகளைப் போன்று தெரு வுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. திமுகவுக்கு மாற் றாக அதிமுகவுக்கு வாக்களித் ததைபோல, தற்போது அதிமுக வுக்கு மாற்றாக திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம். 6 தலைவர்கள் மெகா கூட்டணி அமைத்து விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி யுள்ளனர். 500 ரூபாய்க்கும், இலவசங்களுக்கும் நம்பி வாக்களித்தால் உங்களை யாராலும் காப் பாற்ற முடியாது. ஆட்சிக்கு வந்தால் படித்த, படிக்காத இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மதுரையில் குளங்களில் தண்ணீர் நிரப்பப்படும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நிரந்தர மாக்கப்படுவர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x