Published : 13 Apr 2016 08:59 AM
Last Updated : 13 Apr 2016 08:59 AM

சென்னையில் மே 8-ல் மாயாவதி பிரச்சாரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, சென்னையில் மே 8-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார். இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி யிடுகிறது. 234 தொகுதியிலும் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி (நாளை) வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேசிய தலைவர் மாயாவதி மே 8-ம் தேதி சென்னை வருகிறார். தீவுத்திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x