Published : 20 Apr 2016 08:26 AM
Last Updated : 20 Apr 2016 08:26 AM
திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: தமிழகத்துக்கு பல துரோகங்கள் செய்தவர் கருணாநிதி. கச்சத்தீவு, காவிரி உரிமைகள் பறிபோனதற்கு அவரே காரணம். காமராஜர் ஆட்சியில் ஊழல் இல்லை. ராஜாஜி, பக்தவத்சலம், அண்ணா ஆட்சியில் ஊழல், மது இல்லை. மதுவை அறிமுகப்படுத்தியது கருணாநிதி தலைமையிலான திமுக. தமிழினத்தை அழித்து, அதன்மீது இருக்கை அமைத்து பதவியை அனுபவிக்கும் கருணாநிதியை, அவரது சொந்த மண்ணில் தோற்கடிக்க திருவாரூர் மக்கள் முன்வர வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT