Published : 01 Apr 2016 08:36 AM
Last Updated : 01 Apr 2016 08:36 AM

சென்னை அதிமுகவினரிடம் இன்று நேர்காணல்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான 2-ம் கட்ட நேர்காணல் நடந்து வருகிறது. 11-ம் நாளான நேற்று தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை,கடலூர், புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

காலை 11.20 மணிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். பிற்பகல் கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. அதைத் தொடர்ந்து 12-வது நாளாக இன்றும் நேர்காணல் தொடர்கிறது. நேற்றைய நேர்காணலில் விடுபட்டவர்கள், சென்னை மாவட்டத்தினர் மற்றும் புதுச்சேரி, கேரள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னையை பொறுத்தவரை, கடந்த மாதம் 6-ம் தேதி நடந்த முதல்கட்ட நேர்காணலின்போது, பெரம்பூர் தொகுதிக்கு வெற்றிவேலும், மயிலாப்பூர் தொகுதிக்கு கவுன்சிலர் நூர்ஜகானும் அழைக்கப்பட்டனர். தற்போது மீதமுள்ள ராயபுரம், துறைமுகம், சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம், எழும்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x