Published : 20 Jan 2022 10:08 AM
Last Updated : 20 Jan 2022 10:08 AM

வேலூர்: விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பரந்தாமன் (30). இவர், தனது நண்பர் பாலாஜியுடன், இரு சக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி நேற்று காலை வந்தார். இரு சக்கர வாகனத்தை பாலாஜி ஓட்டினார்.

காட்பாடி சில்க் மில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது முன்னால் சென்ற கனரக லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் இருந்து இருவரும் தடுமாறி விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த பரந்தாமன் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலாஜி படுகாயமடைந்தார்.

இந்த விபத்தால் காட்பாடி - வேலூர் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ் வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்ததும், விருதம்பட்டு காவல் துறையினர் அங்கு வந்து காயமடைந்த பாலாஜியை மீட்பு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பரந்தாமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x