Published : 19 Jan 2022 07:22 PM
Last Updated : 19 Jan 2022 07:22 PM

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவரும் பி.ஸ்ரீவெங்கடபிரியாவுக்கு லேசான பாதிப்புகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 29,87,254 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 23,888 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 8,305 பேர் பாதிக்கப்பட்டனர். 15,036 பேர் குணமடைந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 19) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பி. ஸ்ரீவெங்கடபிரியாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 2020 நவம்பரில் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரீவெங்கடபிரியா.

மாவட்ட ஆட்சியர் பி.ஸ்ரீவெங்கடபிரியா, லேசான அறிகுறிகளுடன் கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x