Published : 19 Jan 2022 12:33 PM
Last Updated : 19 Jan 2022 12:33 PM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்த்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. மாநிலத் தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்துவரும் இந்தக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கட்சிக்குத் தலா 2 பேர் வீதம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா அல்லது இரண்டு கட்டங்களாக நடத்துவதா என்பது குறித்தும், கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்களிக்க வரும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், இந்த மாதம் 22ஆம் தேதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x