Published : 18 Apr 2016 08:16 AM
Last Updated : 18 Apr 2016 08:16 AM
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இது தவிர வேறு என்னென்ன வாக்குறுதிகளை அதிமுக அளிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அதிமுகவினரிடமும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தற்போது வளர்பிறை, 21-ம் தேதிக்கு பிறகு தேய்பிறை. 21-ம் தேதி சித்ரா பவுர்ணமி வருவதால், அன்று தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT