Published : 06 Apr 2016 10:42 AM
Last Updated : 06 Apr 2016 10:42 AM
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்று முன்தினம் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வந்தார். அங்கு கட்சியின் தேர்தல் அறிக்கையை வைத்து வழிபட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிட 527 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். வருகிற 20-ம்தேதி எனது பிறந்தநாளன்று தேர்தல் அறிக்கையும், முழுமையான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். நாங்கள் வெற்றி பெற்றால் குடும்ப அட்டைக்கு வட்டியில்லாமல் ரூ.1 கோடி வரை கடன் வழங்குவோம். இலவசங்கள் ஒழிக்கப்படும். பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்படும்.
பாஜக, இந்து மக்கள் கட்சியின் கோரிக்கைகளை புறக்கணித்ததால் தனித்துப் போட்டியிடுகிறோம். பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளை நாங்கள் ஆதரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT