Published : 29 Apr 2016 09:15 AM
Last Updated : 29 Apr 2016 09:15 AM

இளங்கோவன் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்

திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிர மடைந்துள்ளது. அனைத்து அரசி யல் கட்சித் தலைவர்களும் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று பிரச் சாரத்தை தொடங்குகிறார்.

இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெறும் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத் தில் பங்கேற்கிறார். 30-ம் தேதி மதுரை வடக்கு, திருமங்கலம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யும் அவர், திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் பேசிகிறார்.

மே 1-ம் தேதி முதுகுளத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி, 2-ம் தேதி திருச்சி கிழக்கு, முசிறி, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். மே 5-ம் தேதி சென்னை தீவுத் திடலில் சோனியா காந்தி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு பிறகு இளங் கோவனின் அடுத்தகட்ட பிரச்சார பயண விவரங்கள் அறிவிக்கப் படும் என காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா தெரிவித்தார்.

குஷ்பு பிரச்சாரம்

கடந்த 25-ம் தேதி ராயபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய காங் கிரஸ் தேசிய செய்தித் தொடர் பாளர் குஷ்பு, நேற்று ஸ்ரீபெரும் புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந் தகையை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

மே 1-ம் தேதி மதுரவாயல், அம்பத்தூர், 2-ம் தேதி விளவங் கோடு, கிள்ளியூர், குளச்சல், 3-ம் தேதி நாங்குநேரி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி ஆகிய தொகுதிகளில் குஷ்பு பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஆ.கோபண்ணா தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x