Published : 26 Apr 2016 09:09 AM
Last Updated : 26 Apr 2016 09:09 AM

வைகோவின் முடிவு குறித்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கருத்து

வைகோவின் முடிவு குறித்து மக்கள் நலக் கூட்ட ணியில் உள்ள தலைவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடவில்லை என வைகோ அறிவித்துள்ளது ஒருபுறம் வருத்தமளித்தாலும், மறுபுறம் அவரது முடிவு வரவேற்கத் தக்கது. மக்கள் ஒற்றுமையை சிதைக் கும் நோக்கத்தில் செயல்படும் சட்டவிரோதிகளால் தான் வைகோ தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்க ளின் சூழ்ச்சியை வைகோ முளை யிலேயே கிள்ளிஎறிந்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்:

திமுகவி னரின் திட்டமிட்ட சதியால் தேவர் சிலைக்கு வைகோவால் மாலை அணிவிக்க முடியவில்லை. அவதூறு கோஷத்தால் மன முடைந்த வைகோ, தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:

வைகோவின் திடீர் முடிவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிற விஷயமாகபடுகிறது. வைகோவின் இந்த முடிவிற்கு திமுகவின் அச்சுறுத்தலே காரணம். இருந்தாலும் சாதி மோதலை தடுக்க வைகோ எடுத்த இந்த நடவடிக்கையை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கின்றது.

இருந்த போதிலும் வைகோ தேர்தலில் பேட்டியிடுவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x