Published : 27 Apr 2016 08:44 AM
Last Updated : 27 Apr 2016 08:44 AM

சென்னையில் 3-ம் நாளில் 18 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை மாவட்டத்தில் நேற்று மொத்தம் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.என்.ராஜா (பாஜக), டி.வேணுகோபால் (சிவசேனா), ஏ.கே.சுவாமி (சுயேச்சை) ஆகிய 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கொளத்தூரில் பாமக வேட்பாளர் எஸ்.கோபால் வேட்புமனு தாக்கல் செய்தார். வில்லிவாக்கதில் நாம் தமிழர் கட்சியின் ஏ.வாகைவேந்தன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திரு.வி.க.நகர் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புஷ்பராஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தி.நகர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வி.வினோத் வேட்புமனு தாக்கல் செய்தார். சேப்பாக்கம் தொகுதி யில் சிவசேனா வேட்பாளர் ஜே.ஏழுமலைவேட்புமனு தாக்கல் செய்தனர்.

அண்ணாநகர் தொகுதியில் மக்களாட்சி கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தமிழக ஸ்தாபன காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்க்கீஸ் தர்மராஜா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x